எரிபொருள் வரிசையில் காத்திருந்த காரொன்றின்மீது திடீரென, கப்பி விழுந்த நிலையில், சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு அருகில், கட்டட நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கட்டடத்தின் உயரத்தில் இருந்து விழுந்த கம்பியொன்று காரை துளைத்துச் சென்றுள்ளது.
காருக்குள் சாரதி இருந்துள்ளார். எனினும், அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
