புற்றுநோயை ஏற்படுத்தும் எண்ணெய் தொகை சந்தையில் விநியோகிக்கப்பட்டுள்ளதால் பொதுமககள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயம் அடங்கிய எண்ணெய்களில் சிறிய தொகை மட்டுமே முடுக்கப்பட்டுள்ளதாகவும், பெருமளவு எண்ணெய் சந்தைகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதுகுறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.
புத்தாண்டு காலம் என்பதால் வீடுகளில் அநேகமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதுண்டு.
எனவே, பாரம்பரிய முறைப்படி வீடுகளில் முடிந்தளவு தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்துமாறு அரச மருத்து அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.