தேர்தலை ஒத்திவைக்க முடியாது!

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பிலோ அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கு அப்பதவியில் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்ககோரி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கோ அரசமைப்பில் இடமில்லை – என்று சட்டத்துறை பேராசியரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேர்தல் நடத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் அரசமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திகதி விவரத்தின் அடிப்படையில் கட்டாயம் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். அந்தவகையில் எதிர்வரும் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்கு இடைப்பட்ட நாளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். இதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கையில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி, தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்ற கதை அடிபடுகின்றது. அவ்வாறு செய்வதற்கு எமது சட்ட கட்டமைப்பில் இடமில்லை.

தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை இல்லை. கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவி காலத்துக்காகவே நாடாளுமன்றம் ஊடாக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜேஆர் ஜயவர்தன நாடாளுமன்றத்தின் ஆயட்காலத்தை நீடித்துக்கொள்வது சம்பந்தமாகவே சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இருந்தார். மாறாக ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அல்ல. எனவே, இவை இரண்டையும் குழப்பிகொள்ளகூடாது.” – என்றார்.

Related Articles

Latest Articles