தேர்தல் குறித்து இ.தொ.கா. தலைவர் அவசர ஆலோசனை!

2023 ஆம் ஆண்டில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இதொகாவின் தலைவர்
செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இதன்போது அவர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், தேர்தல் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

Latest Articles