தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 21 ஆம் திகதி பொது கூட்டமொன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் இக்கூட்டம் நடத்தப்படும் என்று கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தினர்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தனர்.










