நாங்களே பலமான சக்தி – மார்தட்டுகிறார் மொட்டு கட்சி செயலர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெகுவிரைவில் நாடு திரும்புவார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், இலங்கையில் தற்போதைய நிலையிலும் மொட்டு கட்சியே பலமானதொரு அரசியல் இயக்கமாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், சர்வக்கட்சி வேலைத்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles