நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 620 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 218 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 784 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 60 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 7 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்.
5 ஆயிரத்து 622 பேர் தொடர்ந்தும் சிகிச்சை
34 பேர் உயிரிழந்துள்ளனர்.