“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. இந்நாட்டுக்காக அவர்கள் சேவையாற்றுகின்றனர்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
எனவே, சம்பள அதிகரிப்பு சட்டப்பூர்வமா என்பதை எல்லாம் ஆராய்வதைவிட அம்மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
