தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தினம் நாளை ஹட்டனில்!

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் இவ்வருட மகளிர் தின விழா நாளை (12) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு டிக்கோயா என்பீல்ட் தாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணி தலைவி திருமதி. சரஸ்வதி சிவகுருவின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவின் பிரதம அதிதியாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரமும், விசேட அதிதியாக சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரும் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் மகளிரணி அங்கத்தவர்கள், தொழிலாளர் தேசிய சங்கப் பணிமனை பெண் உத்தியோகஸ்தர்கள், மாவட்ட தலைவிகள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், பெண் வேட்பாளர்கள்,தோட்ட கமிட்டி தலைவிகள், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு உரைகள் ,கௌரவிப்புகள் உட்பட பல நிகழ்வுகள் இடம் பெற உள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles