பாதாள குழு தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான “மன்னா ரமேஷ்” டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மன்னா ரமேசும், அவரது மனைவியும் காரொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது.
இவர்கள் பயணிக்கும் காரில் போதைப்பொருள் இருப்பதாக சாஜா பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த வாகனத்தை சாஜா பொலிஸார் சோதனையிட்டனர். இதன்போது இருவரும் பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். அதன்பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னா ரமேஷை பொலிஸில் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அவரின் எதிராளி குழுக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மன்னா ரமேஷை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என இலங்கை பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
