கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 05 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 640 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 253 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.