இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் நுவரெலியா மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். 37 பேர் காணாமல் போயுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
767 வீடுகள் முழுமையாகவும், 3 ஆயிரத்து 742 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
6 ஆயிரத்து 652 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 825 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
டித்வா புயலை அடுத்து ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 19 ஆயிரத்து 780 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.










