இப்பிரதான பாதை மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களுக்கென இ.போ.சபை மூலம் செயற்படுத்தப்பட்ட பேருந்து சேவையும் இடைநிறுத்தப்பட்டன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாகவும் செயற்பட்ட அரசியல்வாதிகள் இப்பாதை தொடர்பாக மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வில்லை.
அத்தோடு தேர்தல் காலத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கண்துடைப்பிற்காக கல்,மணல் என்பவற்றை கொட்டி அதனை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக மக்கள் பல்வேறு விசனங்களை தெரிவித்தனர். இப்பாதையினை பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் , கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள்,தொழில் புரிவோர் என பலர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பயன்படுத்தி வந்தனர்.
மக்கள் இப்பாதையினை அபிவிருத்தி செய்துதருமாறு நோர்வூட் பிரதேச சபை தலைவர் என்றவகையில என்னிடம் கோரிக்கையினை முன்வைத்தனர்.
இவ்விடயம் தொடர்பாக மறைந்த இந்திய வம்சாவழி மக்களின் தார்மீக தலைவர் அமரர்.கெளரவ.ஆறுமுகன் தொண்டமான் அவர்கள், கெளரவ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களின் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க கெளரவ ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட 100,000KM காபர்ட் பாதை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளெடுக்குமாறு பணித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.
அந்தவகையில் பிரதேச சபை தலைவர் என்றவகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 km காபர்ட் பாதையில் 4.2km இவ் கெம்பியன்- இராணிகாடு பிரதான பாதைக்காக முன்மொழிவினை முன்வைத்தேன்.இதற்கமைய ஒன்பது கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொது தேர்தல் மற்றும் கொரனா தொற்றின் காரணமாக தாமத்தினை அடுத்து
கெளரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் அழுத்தத்தின் காரணமாக இவ் வேலைதிட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது வெகு விரைவில் மக்களின் பாவனைக்காக இப்பாதை கையளிக்கப்படும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.