நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் பிணையில் விடுவிப்பு – மார்ச் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவு

பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர், ஒரு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
அரசியல் பிரமுகர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட அவர், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
 
இதன்போதே அவர் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Latest Articles