பசறையில் ஹெரோயினுடன் நால்வர் கைது!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை- செங்கலடி வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் பசறை பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் அதிகாரி அஞ்சுல இஷார குமார தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று  (25)இரவு இடம்பெற்றுள்ளது.

பசறை பொலிஸாருக்கு கிடைத்துள்ள இரகசிய தகவலொன்றை அடிப்படையாக வைத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போதே மேற்படி சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பதுளை மஜிஸ்ட்ரேட் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.பசறை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Related Articles

Latest Articles