பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

பசறை பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பிலிருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தப்பட்ட 28 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்முடிவுகளின்படி மொணராகலை பிரதேச தொற்றாளரோடு நெருங்கிய தொடர்பை பேணிய 15 வயதுடைய டெமேரியா வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கும், கொழும்பிலிருந்து வருகை தந்த யூரி தோட்ட தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருக்குமே கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக பசறை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் வீ.இராஜதுரை தெரிவித்தார்.

இதன்படி பசறை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக பதிவானது. இவர்களில் 26 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

– நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles