பதுளையில் மனைவிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய கணவன் கைது!

தனது மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ஹிந்தகொட பகுதியில் நேற்று மாலை (31) குடும்பத் தகராறு காரணமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியாலேயே இச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய கரகஹ உல்பத நவஜனபதய ஹகுன்னாவ வெளிமடை பகுதியை சேர்ந்தவர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் shot gun துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 5 , SFG ரக கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் 33 வயதுடைய குறித்த நபரின் மனைவி எனவும் குறித்த பெண்ணின் கையில் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பதுளை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் குறியர் சேவையில் பணி புரிபவர் எனவும் பதுளை பசறை வீதியில் ஹிந்தகொட பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவருடன் காதல் உறவு பேணி வந்ததாகவும் இதை அறிந்த மனைவி குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வேளையிலேயே கணவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த சந்தேக நபர் பயணித்த காரை சோதனைக்கு உட்படுத்திய போதே shot gun துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஐந்து ரவைகள் மற்றும் கைக்குண்டும் மீட்கப்பட்டதாகவும், குறித்த சந்தேக நபர் முன்னாள் இராணுவ வீரர் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles