கொரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 393 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்து 137 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 45 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.