எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன் , தலைமை பொறியிலாளர் ஆகியோரிடம் இன்று (31) வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்தே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
அதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்காக 10 அதிகாரிகள் கொண்ட சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
