இந்தியாவின் நிதிப்பங்களிப்புடன் யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்துக்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நன்கொடையாக பெற்றுக்கொள்வதற்கு அந்நாட்டுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இதற்கான பத்திரத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசண்ண ரணதுங்க முன்வைத்துள்ளார்.
