ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி.பதவியை துறப்பவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பஸிலுக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு மொட்டு கட்சியின் நான்கு உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர் எனவும், இதில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவே பெரும்பாலும் பதவி துறக்ககூடும் எனவும் தெரியவருகின்றது.
அவ்வாறு பதவி துறக்கும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கியின் ஆளுநர் பதவி அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.










