இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள நாடு திரும்பிய இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையை விமானப்படை வீரர் ரொஷான் அபேசுந்தர படைத்துள்ளார். இது ஆசிய சாதனையாகவும் அமைந்துள்ளது.
இச்சாதனையை புரிவதற்கு (59.3 கிலோ மீற்றர்) அவருக்கு 28 மணித்தியாலங்களும் 19 நிமிடங்களும் 43 வினாடிகளும் எடுத்துள்ளது.
இதற்குமுன்னர் 1971 ஆம் ஆண்டு குமார் ஆனந்தன் என்பவர் பாக்கு நீரிணையை நீந்தி கடந்து மீள திரும்பிய முதலாவது இலங்கையர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.