பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான வெளியான புதிய தகவல்

சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான விடயமாகும். அதற்கான சுகாதார வழிகாட்டல்களை பெற்றுக்கொடுப்பது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.

இருத்துறை சார்ந்த அதிகாரிகளும் இதன்போது கலந்துரையாடல் நடத்தி இணக்கப்பாடுகளை எட்டியுள்ளனர். சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் மூத்த அதிகாரிகள் உட்பட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 5000 பாடசாலைகள் உள்ளன. விரைவில் இதுபோன்ற பாடசாலைகளை தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தரம் 6 வரை முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை தொடங்குவதில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதியை கல்வி அமைச்சு முடிவு செய்யும். அடுத்த இரண்டு மூன்று வாரங்களுக்குள் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் ஆழமாக ஆராயப்பட்டது.

“ ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி வழங்கப்படாத போக்குவரத்து சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் விரைவில் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்”- என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles