‘பிரதேச சபை தலைவர் பங்கேற்ற நிகழ்வுகளுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தனிமைப்படுத்தப்படுவர்’

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது திரட்டப்பட்டுவருகின்றன.

இரு பிராந்திய ஊடகவியலாளர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கு சென்ற ஏனையவர்களின் விபரம் நாளைக்குள் திரட்டப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles