புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனின் உயிரை பறித்த டெங்கு – யாழில் பெரும் சோகம்

யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் ஒருவர், பெறுபேறுகளை பெறுவதற்கு இன்று உயிரிருடன் இல்லை. இந்த சோகச் சம்பவமானது, விழிநீரை பெருக்கெடுக்க வைத்துள்ளது.

யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் டெங்கு நோயால் அண்மையில் பலியானார்.

இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது. இதில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த மாணவன் டெங்கு நோயினால் உயிரிழந்த தினத்தன்று அவர் பரீட்சையில் சித்தியடைவார் என அவரது ஆசிரியர் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles