நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில், 82 வயதுடைய வயோதி பெண்ணொருவர் நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
பி. சின்னம்மா என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
” கடந்த 45 வருடங்களாக வாழ்ந்து வந்த வீட்டை விட்டு
வெளியேருமாறு எனது மருமகன் அச்சுறுத்துகிறார். இதற்கு தோட்ட தலைவரும், நிர்வாகமும் துணைநிற்கின்றது. என்னால் வெளியேற முடியாது. நீதி வேண்டும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் வினவியபோது, இவ்விவகாரம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படும் என குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் -சதீஸ்