இலங்கைக் கடற்படை மற்றும் மன் னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக் கையின் மூலம் 1, 472 போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஓர் ஓட்டோவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று மதியம் மன்னார் நகர் பகுதியில் இடம்பெற் றுள்ளது.
வடமேற்குக் கடற்படைக் கட்டளையி னால் வழங்கப்பட்ட தகவலின் அடிப் படையில் வடமத்திய கடற்படை கட்ட ளையில் உள்ள கஜபா மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடு தல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையில் 20 Pregabalin கேப்சூல்கள் வைத்திருந்ததற் காக ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் இருந்து 1432 Pregabalin காப்ஸ்யூல்கள் மற்றும் ஓட்டோ ஒன்றில் இருந்து அதே மருந்தின் 20 காப்ஸ் யூல்கள் உடன் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத் துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர் கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள் ளனர். சந்தேகநபர்கள் மருந்து மாத் திரைகள் மற்றும் ஓட்டோவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
