மதுபானசாலை திறப்புக்கு எதிராக கொத்மலையில் போராட்டம்!

கொத்மலை, வெவதென்ன வெவஹேன நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொத்மலையை சூழ உள்ள கிராம வாசிகள் இரண்டாவது முறையாகவும் இன்று (05) பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொத்மலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள மேற்படி நீர்வீழ்ச்சியினை பார்வையிடுவதற்காக தினமும் நூற்றுக்கணக்காக உள்நாட்டு ,வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

அத்துடன், அருகில் பாடசாலைகள் மற்றும் மதஸ்தானங்களும் அமைந்துள்ளன.

இந்நிலையிலேயே இப்பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles