மதுபோதையில் வந்து வன்முறையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் தனது மச்சானை கோடரியால் தாக்கி கொலை செய்த நபர் தெஹியோவிட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார், 43 வயதான அவரின் மச்சான் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மது போதையில் வீட்டிற்கு வந்து, அவரின் சாகோதரியை தாக்கியுள்ளார். இதனை அவதானித்த அவரது கணவர் மனைவியின் சகோதரனை கோடரி மற்றும் கல்லால் பலமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










