ஈரான்மீதான தாக்குதலானது ஐ.நா. சாசனத்தைமீறும் செயலாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேபோல ஐக்கிய அரபு அமீகரம், சவூதி, கட்டார் உள்ளிட்ட நாடுகள்மீது ஈரான் நடத்திய தாக்குதலையும் கண்டிக்கின்றோம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையால் எமது நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் அவசியம்.
இதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்க வேண்டும். கட்சி பேதம் இன்றி அனைவரும் பங்கேற்க வேண்டும் என சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.










