!
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 19 மற்றும் 22 (திங்கட்கிழமை) ஆம் திகதிகளில் கனமழை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வீதிகளில் பயணிக்க சிரமம் ஏற்படக்கூடும் என்பதாலும், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் 19 மற்றும் 22 ஆகிய திகதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.










