“மலையகம்தான் எங்கள் தாயகம். எனவே, எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கில் குடியேற வரப்போவதில்லை.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அதிகம் பேசினார்கள். அப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு, அவர்கள் எமது பகுதியிலேயே குடியமர்த்தப்பட வேண்டும்.
மலையகம்தான் எங்கள் தாயம். எனவே, வடக்கு, கிழக்குக்கு சென்று குடியேறப்போவதில்லை. “ –என்றார்.










