மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 25 பேர் காயம்

மாவனெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரண சடங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே மின்னல் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் நேற்று மாவனெல்ல − பெமினிவத்தை பகுதியிலுள்ள மயானமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் சிறுவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles