” நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது.” – என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை நிலைவரத்தை காரணம்காட்டி, மீண்டும் ஒருமுறை விலை அதிகரிப்பு இடம்பெறக்கூடும் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
