ஆளுங் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குமிடையில் அடுத்தவாரம் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு பங்காளிக்கட்சி தலைவர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இறுதி முடிவை எடுக்கும் நோக்கி பங்காளிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பின்போது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை தீர்மானிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
மேற்படி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.