கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை மேல் மாகாணத்தில் 99 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை கொழும்பு மாவட்டத்தில் 49 ஆயிரத்து 247 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 33 ஆயிரத்து 360
பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 234 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்று 608 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 547 பேருக்கு களுத்துறை மாவட்டத்தில் 447 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
