‘மேல் மாகாணத்தில் 23 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்’

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (09) காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில்
• மட்டக்குளி பொலிஸ் பிரிவு
• முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• கரையோர பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
• தெமட்டகொட பொலிஸ் பிரிவு
• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்
• வத்தளை பொலிஸ் பிரிவு
• பேலியகொடை பொலிஸ் பிரிவு
• கடவத்த பொலிஸ் பிரிவு
• ராகம பொலிஸ் பிரிவு
• நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• பமுனுகம பொலிஸ் பிரிவு
• ஜா-எல பொலிஸ் பிரிவு
• சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
• ஹொரணை பொலிஸ் பிரிவு
• இங்கிரிய பொலிஸ் பிரிவு
• வேக்கட கிராம உத்தியோகஸ்தர் பிரிவு

குருநாகல் மாவட்டம்
• குருநாகல் மா நகர எல்லை பகுதிக்குள்
• குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

கேகாலை மாவட்டம்
• மாவனல்ல பொலிஸ் பிரிவு
• ரூவான்வெல்லை பொலிஸ் பிரிவு

இதேபோன்று கீழ் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் பொது மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

• மெத்சந்த செவன
• மிஹிஜய செவன
• மோதர ரன்மிண செவன
• சிரிசந்த உயன தெமட்டகொட
• மாளிகாவத்தை  வீடமைப்பு

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles