” பல்லேகல மற்றும் ஆர்.பிரேமதாச மைதான ஊழியர்களுக்கு (Ground Staff) ஆசிய கிரிக்கெட் பேரவை தலைவர் ஜெய் ஷா வழங்கிய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கி இருந்தார். அத்துடன், இறுதிப்போட்டியின் நாயகன் முகமது சிராஜ் 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தார். ஆனால் இந்த நிதி இன்றுவரை அந்த ஊழியர்களுக்கு செலுத்தப்படவில்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிதிக்கு என்ன நடந்தது என்பதை விளையாட்டுத்துறை அமைச்சர் தேட வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.










