மொனறாகலை, படல்கும்பர நகரின் சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு படல்கும்பர வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மீண்டும் நகரின் வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தசில நாட்களில் படல்கும்பர பிரதேச அலுபொத்த பகுதியில் இருபதுக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டதை பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நலன் கருதி குறித்த பகுதியை அண்மித்த படல்கும்பர நகரவர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர்.
நடராஜா மலர்வேந்தன்










