நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டே நடத்தப்பட்டது, புதிய கணக்கெடுப்பை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யானை மனித மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று விரைவில் தயாரிக்கப்படவிருப்பதாவும், இதன் ஒரு அங்கமாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
