யானை பதிவு ஆவணம் அல்லது “யானை புத்தகத்தை” நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் பதிவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு இன்று (02) தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகளினால் யானை புத்தகத்தை இன்று முதல் 10 நாட்களுக்குள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.










