‘யாழில் நடைபெற்ற கூட்டத்தில் ஜீவனுக்கு 2ஆவது வரிசை ஆசனம்’

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இரண்டாவது வரிசையிலேயே ஆசனம் வடங்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் முதல் வரிசையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச அதிபர்கள், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் அமர்ந்திருந்த நிலையில் ஜீவன் தொண்டமானுக்கு மாத்திரம் அவர்களுக்கு பின் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது.

இதன்போது கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது, கூட்டம் நிறைவடையும் வரை மௌனமாகவே இருந்தார்.

நன்றி – தினகரன்

( நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.)

Related Articles

Latest Articles