எல்.பி.எல். கிரிக்கெட் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
சீரற்ற காலநிலையால் 5 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Galle Gladiators அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Colombo Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களைப்பெற்றது. 19 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்களாக 65 ஓட்டங்களை ரஸல் பெற்றார்.
66 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய காலி அணியால் 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நேற்றைய போட்டியில் மூன்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.