“ ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.










