ரத்வத்த தோட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் உறுதி

” மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் நீதி கோரியும் , அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.

” எனது பகுதிகளிலும் தோட்ட நிர்வாகத்தால் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. இவை குறித்து துறைசார் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.” – எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles