ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்த சனல் – 4 சதி!

” ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே சனல் – 4 வால் போலியான காணொளி வெளியிடப்பட்டுவருகின்றது.”  – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” போர் தொடர்பிலும் போலியான காணொளிகளை சனல் – 4 வெளியிட்டது, தற்போதும் அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது, எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும்.” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, சனல் – 4 காணொளி திரிவுபடுத்தப்பட்ட போலியான தகவல்களை உள்ளடக்கியது என்று மொட்டு கட்சியின் செயலாளரும் இன்று அறிவித்தார்.

 

Related Articles

Latest Articles