‘ரி-20 தொடர்களால் 50 ஓவர்கள் போட்டிகளுக்கு ஆபத்து’

பல்வேறு நாடுகள் நடத்தும் டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானவை என்று தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் பாப் டூப்ளசிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 டி20 லீக் தொடர்களே நடந்து வந்தது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளில் 7 டி20 லீக் தொடர்கள் இப்போது நடக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆபத்தானது. மேலும் இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு பல்வேறு நெருக்கடியை கொடுக்கும்” என்றார் டூப்ளசிஸ்.

 ” வெஸ்ட் இண்டீஸில்தான் முதல் முதலில் டி20 லீக் போட்டிகள் நடக்க ஆரம்பித்தது. அப்போது அந்நாட்டு வீரர்கள் உள்நாட்டு டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி பல திறமையான வீரர்களை இழந்தது. இப்போது தென் ஆப்பிரிக்காவிலும் இதே நிலைதான் நடக்கிறது” என்றார் டூப்ளசிஸ்.

Related Articles

Latest Articles