இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ரி – 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகின்றது.
இலங்கை ரி – 20 அணியின் தலைவராக வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் தலைமையின்கீழ் இலங்கை அணி எதிர்கொள்ளும் முதலாவது போட்டி இதுவாகும்.
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.