லபுக்கலையில் பஸ் விபத்து – நால்வர் படுகாயம்!

நுவரெலியாவிலிருந்து லபுக்கலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்று, நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின்போது குறித்த பஸ்ஸில் 30 பேர்வரை பயணித்துள்ளனர்.

பஸ் சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்து தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles