லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவேன்: காணி உரிமை வழங்குவேன்

லயன் அறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களையும், தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கின்ற இளைஞர்களையும் சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கே ஜனாதிபதியான பிறகு நுவரெலியாவுக்கு நான் வருவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்தோடு இந்த ஜனாதிபதி அநுரகுமாரவின் பிரத்தியேகச் செயலாளராவதற்கு அவர் விருப்பப்படுகின்றார். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, நுவரெலியா – தலவாக்கலையில் 08.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

200 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்த தோட்டத் தொழிலாளர்கள் வியர்வை சிந்தி, கண்ணீர் வடித்து, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு வழங்குகின்ற ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்த பக்கபலம் குறித்து நாம் பெருமைப்பட்டு அவர்களுக்கு நன்றி கூறி கௌரவ படுத்துகின்றோம்.

அத்தோடு இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களை சமமான முறையில் ஏற்றுக் கொள்கின்றோம். தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் ரீதியான தகுதியான பிரதிநிதித்துவத்தை வழங்குவதோடு, காணிக்கான, வீட்டுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு உறுதி பூண்டு, லயன் அறைகளுக்கு பதிலாக தனியான குடியிருப்பு கிராமங்களை அமைத்துக் கொடுப்பதற்கான அடித்தளத்தை இடுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபா 1500 ரூபா 2000 ரூபா ஆக வழங்குவோம், பெற்றுத் தருவோம் என தேர்தல் காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள். லயன் அறைகளில் வாழ்ந்து கூலித் தொழிலில் வாழ்க்கையை கழிக்கின்ற இந்த மக்களுக்காகவும், இந்த இளைஞர்களுக்காகவும், விவசாய காணியை வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம். அத்தோடு விவசாயிகளுக்கு தேவையான உரத்தை 5000 ரூபாவிற்கு வழங்குவோம் என்று கூறிய போது இந்த அரசாங்கம் அதனை 4000 ரூபாவுக்கு வழங்குவோம் என ஜனாதிபதி சொல்லிக்கொண்டு திரிவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தோட்டப்புறங்களுக்கு தேசியப் பாடசாலைகள்

ஆரம்ப பாடசாலை முதல் கல்வித் துறையை மேம்படுத்துவதோடு சகல வசதிகளையும் வழங்குவோம். சிறந்த கல்வியை வழங்குவதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். பாடசாலை கட்டமைப்பை பலப்படுத்துவதோடு பல புதிய தேசிய பாடசாலைகளையும் உருவாக்குவோம். சிங்களம், தமிழ், முஸ்லிம், பேக்கர் அனைவருக்கும் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் முன்னேற்றத்தை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம், கணினி விஞ்ஞானம், திறன் விருத்தி கல்வி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி, சர்வதேச மட்டத்திலான தொழிற்பயிற்சி நிலையங்களையும் உருவாக்கி இளைஞர்களை அறிவு ரீதியாக உயர்த்துவோம். அத்தோடு நுவரெலியா இளைஞர்களுக்காக புதிய பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்குவோம். அதன் ஊடாக புத்தாக்க துறையை கற்பித்து புதிய வர்த்தக முறைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles